011 1 750x375 1
செய்திகள்இலங்கை

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

Share

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பமொன்று இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மேற்கு ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசிக்கும் இளம் தம்பதியினர் வீட்டில் நேற்றுமுன்தினம் (14) இரவு 11 மணியளவில் கூறிய ஆயுதங்களுடன் வந்த மூவர் அடங்கிய கும்பல் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

வீட்டின், யன்னல் கண்ணாடிகள், கதவுகள், கேட் என்பவற்றை தாக்கி அவற்றை சேதப்படுத்தியதோடு குறித்த தம்பதியினரையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலால் சுமார் 1 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் சேதமாகியுள்ளன

இந்த நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.எனினும் நேற்று காலை 10 மணி வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை.

இந்நிலையில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

011 2 600x288 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...