mannar vaccination card 3 600x400 1
செய்திகள்இலங்கை

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

Share

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார துறையினரும் விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வந்தனர்

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார பரிசோதகர்கள் உதவியோடு தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருவதுடன் 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுடைய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி, வங்காலை – நானாட்டான் பிரதான வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி உள்ளடங்களாக பல்வேறு சோதனைச் சாவடிகளில் இராணுவத்தின் உதவியுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கொரோனா அட்டைகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அல்லது அன்டிஜென் , பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

mannar vaccination card 1 600x400 1 mannar vaccination card 2 600x400 1 mannar vaccination card 4 750x375 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...