mannar vaccination card 3 600x400 1
செய்திகள்இலங்கை

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

Share

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார துறையினரும் விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வந்தனர்

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார பரிசோதகர்கள் உதவியோடு தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருவதுடன் 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுடைய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி, வங்காலை – நானாட்டான் பிரதான வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி உள்ளடங்களாக பல்வேறு சோதனைச் சாவடிகளில் இராணுவத்தின் உதவியுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கொரோனா அட்டைகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அல்லது அன்டிஜென் , பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

mannar vaccination card 1 600x400 1 mannar vaccination card 2 600x400 1 mannar vaccination card 4 750x375 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...