tamilni 376 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிற்கு திரும்பும் இலங்கையின் வரலாற்று பொக்கிஷங்கள்

Share

நாட்டிற்கு திரும்பும் இலங்கையின் வரலாற்று பொக்கிஷங்கள்

கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் இன்று(28.08.2023) குறித்த இரண்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

1765 ஆம் ஆண்டில், கண்டியில் உள்ள அரச மாளிகையை கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் அங்கிருந்து வரலாற்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு நடத்திய ஆய்வின்படி, நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் (RIJKS) நூதனசாலையில் இலங்கைக்கு உரித்தான புகழ்பெற்ற லெவ்கே திசாவா பீரங்கி, இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி துண்டுகள், கத்திகள், இரண்டு துப்பாக்கிகள் என்பன காணப்படுவதாக தெரியவந்திருந்தது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...