image c41642f730 1
செய்திகள்இலங்கை

வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி

Share

வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி

வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி முதல் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் ஓகஸ்ட் மாதத்திலும், 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்டெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 228 இறப்புகள் ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இடம்பெற்றுள்ளன.

வடமாகாணத்தில் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலே இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மக்கள் விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...