corona death 2
இலங்கைசெய்திகள்

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

Share

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தலா 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிதி ஒதுக்கபட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் சடல தகனத்துக்கு 1 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சுக்குரிய தகன சாலைகளின் செலவீனத்தை பெற்றுகொடுக்கும் முகமாகவே இந்த நிதியை ஒதுக்கீடுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 சடலங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...