கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!
கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தலா 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிதி ஒதுக்கபட்டுள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் சடல தகனத்துக்கு 1 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி அமைச்சுக்குரிய தகன சாலைகளின் செலவீனத்தை பெற்றுகொடுக்கும் முகமாகவே இந்த நிதியை ஒதுக்கீடுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 சடலங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.
Leave a comment