5675675
இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கே மதுபானம்!

Share

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவிக்கையில்,

தனிப்படுத்தல் காலத்தில் ‘பயோ பபிள்’ திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தால் தரப்படுத்தப்பட்டுள்ள ஹொட்டல்களிலேயே சுற்றுலா பயணிகள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது, குறித்த பயணிகளுக்கே மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய ஹொட்டல்கள் தொடர்பில் ஊரடங்கு காலம் நீங்கியதும் அனுமதியளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கிய பின்னர் சாதாரண மது விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதும், மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களே மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...