WhatsApp Image 2021 09 12 at 09.28.19 1
இலங்கைசெய்திகள்

வண்ணமயமாகியது களனி பாலம் !!

Share

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன.

நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது,

நாட்டில் முதன்முதலில் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தின் இரு பகுதிகளையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் ;மற்றும் புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கங்கள் ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

k k1 k2 k3k4 k6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...