tamilni 434 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

Share

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

போதைப்பொருள் கடத்தல் காரணமாக கடந்த 27ஆம் திகதி குவைத் மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மேல் ஹல்மில்லேவ அதிரணிகம பகுதியைச் சேர்ந்த ஜூட் ரவிந்து கூப்பர் (வயது 43) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் பிரியங்கரகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் இலங்கையில் உள்ள அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குவைத் தூதரகத்தின் ஊடாக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்

அநுராதபுரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் எச்.எம்.சுனில் அதிராணிகம உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் குவைத் தூதுவர் கே. காண்டீபனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உறவினர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....