bus 546546
இலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குக! – தனியார் பஸ் உரிமையாளர்கள் போர்க்கொடி

Share

தமக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீக்கப்படினும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டோம் என தனியார் பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்கள் இயக்கப்படாமையால் 50 ஆயிரம் பஸ் ஊழியர்களும் 11 ஆயிரம் பஸ் உரிமையாளர்களும் எந்தவித வருமானமும் இன்றி மோசன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தனியார் பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னரும் பஸ்கள் இயங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...