tamilni 405 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

Share

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி .

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி மதியம் 1:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக சென்ற பொழுது வீட்டில் தந்தையுடன் இருந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தந்தையார் நித்திரையில் இருந்த பொழுது காணிக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற (மண்) கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான் .

திடீரென கண் விழித்த தந்தை சிறுவனைக் காணாது தேடியுள்ளார். பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிணற்றுக்குள் சேற்றில் புதைந்த நிலையில் சிறுவனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சந்திரகுமார் பாதுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...

world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

world 36
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தாக்குதல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, ஈரானின் லவான்...

world 35
உலகம்செய்திகள்

ஈரான் போர்நிறுத்தத்தை வரவேற்ற ஜெலென்ஸ்கி: ரஷ்யாவுக்கும் போர்நிறுத்த அழைப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்த உடன்படிக்கையை உக்ரைன் அதிபர் வொலோடிமிர்...