pcr test
செய்திகள்இலங்கை

காரைநகர் திருமண கொண்டாட்டம் – 13 சிறுவர்கள் உட்பட 35 பேருக்கு தொற்று!

Share

அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் காரைநகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் தகவல் அறிந்த சுகாதாரப் பிரிவினர் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேவேளை, அவர்களிடம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் மீது சிலர் தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த மாதிரிகளின் சோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையிலேயே 13 சிறுவர்கள் உட்பட 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றாளர்கள் திருமண நிகழ்வுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் சுகாதாரப் பிரிவு உறுதிசெய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...