image 8ed2ad8949
விளையாட்டுசெய்திகள்

பதவியை இராஜினாமா செய்தார் ரஷித் கான்!

Share

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள தமது அணி வீரர்களின் விபரத்தை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகின்றது,

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை நேற்று (09) அறிவித்தது.இந்த அணிக்கு ரஷித் கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டதுடன், அணியில் மாற்று வீரர்கள் இருவர் உட்பட மொத்தமாக 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படட சில நிமிடங்களில் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என ரஷித் கான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

அணித்தலைவர் எனும் வகையில் உலகக்கோப்பை அணி தெரிவு செய்யப்படும் போது என்னிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே நான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக முஹமது நபி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...