tamilni 255 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு

Share

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு

கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் 1990 அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவையால் கலவானை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மோதலில் மற்ற குழுவை சேர்ந்த ஒருவரும் காயமடைந்து சிகிச்சை பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

இதன் போது அம்பியுலன்ஸில் கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது காயமடைந்த நபரின் சகோதரி தாக்குதலை தடுத்துள்ளார்.

மூன்று சந்தர்ப்பங்களிலும் கத்திக்குத்து முயற்சியை தடுக்கச் சென்ற பெண்ம் காயமடைந்துள்ளார். 1990 அம்பியுலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை பறித்து துரத்திச் சென்று கொலை செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திகுத்து மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...