tamilni 255 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு

Share

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு

கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் 1990 அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவையால் கலவானை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மோதலில் மற்ற குழுவை சேர்ந்த ஒருவரும் காயமடைந்து சிகிச்சை பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

இதன் போது அம்பியுலன்ஸில் கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது காயமடைந்த நபரின் சகோதரி தாக்குதலை தடுத்துள்ளார்.

மூன்று சந்தர்ப்பங்களிலும் கத்திக்குத்து முயற்சியை தடுக்கச் சென்ற பெண்ம் காயமடைந்துள்ளார். 1990 அம்பியுலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த நபரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை பறித்து துரத்திச் சென்று கொலை செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திகுத்து மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...