namal 678
இலங்கைசெய்திகள்

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல்

Share

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல்

தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக அளவிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

யாழுக்கு இன்று விஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் நாமல் ராஜபக்ச இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெற்கு தெய்வேந்திரமுனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறைமுனை வரை அரசால் அபிவிருத்தி திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக அளவிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.மாநகர சபைக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது. அது பல மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்றிட்டங்களுக்கு வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றது.

எனவே தற்போதைய அரசு பிரிவினை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கின்றது. எனினும் அந்தத் தடையைத் தாண்டி அதனைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டதோடு அபிவிருத்தியையும் அரசு முன்னெடுக்கின்றது.

அத்துடன் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...