கடவுச்சீட்டு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

Share

கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்!

ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதற்கமைய, புதிய முறையின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

முன்பு சாதாரண முறையின் கீழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க 14 வேலை நாட்கள் ஆனது.

ஒரு நாள் சேவையின் கீழ் வசூலிக்கப்படும் தொகை 20,000 ரூபாயாகும். இவற்றில் 6089 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் 2177 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 1259 பேருக்கு பணம் செலுத்தப்பட்டது.

பொதுவான சேவையின் கீழ் 9143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 4830 விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...