ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது.

திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின் கீழ், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, மற்றும் குழந்தைகளை மட்டும் அல்லாது, தங்கள் பெற்றோரைக்கூட இனி ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளலாம்.

கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.

இம்மாதம், அதாவது, ஜூலை 7ஆம் திகதி, நாடாளுமன்றத்தின் மேலவையில், திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திட்டமிட்டப்படி, எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்தால், 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்குள் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் மசோதா ஜனாதிபதியால் சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.

எப்படியும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...