ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது.

திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின் கீழ், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, மற்றும் குழந்தைகளை மட்டும் அல்லாது, தங்கள் பெற்றோரைக்கூட இனி ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளலாம்.

கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.

இம்மாதம், அதாவது, ஜூலை 7ஆம் திகதி, நாடாளுமன்றத்தின் மேலவையில், திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திட்டமிட்டப்படி, எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்தால், 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்குள் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் மசோதா ஜனாதிபதியால் சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.

எப்படியும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...