ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது.

திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின் கீழ், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, மற்றும் குழந்தைகளை மட்டும் அல்லாது, தங்கள் பெற்றோரைக்கூட இனி ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளலாம்.

கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.

இம்மாதம், அதாவது, ஜூலை 7ஆம் திகதி, நாடாளுமன்றத்தின் மேலவையில், திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திட்டமிட்டப்படி, எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்தால், 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்குள் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் மசோதா ஜனாதிபதியால் சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.

எப்படியும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...