அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை
இலங்கைசெய்திகள்

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை! வெளியேறிய கடைசி நிபுணர்

Share

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை!

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கு குறைந்தது 4,000 நிபுணத்துவ மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனினும் தற்போது, 2000 மருத்துவர்களே சேவையில் உள்ளனர்.

அத்துடன் சிறப்பு மருத்துவர்களின் ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முடிவால், மீதமுள்ள 50 சதவீதத்தில் சுமார் 250 மருத்துவர்கள் தமது பதவியை இழப்பார்கள் என்றும் அசோக குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 289 மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 155 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களில் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மீதமுள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால், சுகாதாரத் துறை மேலும் 20 மயக்க மருந்து நிபுணர்களை இழக்கும் என்று குணரத்ன கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் குழந்தை கதிரியக்க மருத்துவத்தில் ஒரே ஒரு நிபுணர் மட்டுமே இருந்தார், அவரும் தற்போது புலம்பெயர்ந்துள்ளார் என்று விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...