23 649c2e88636d9
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் கூடிய அமைச்சரவை – மறுசீரமைப்பு யோசனைக்கு அனுமதி

Share

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்ததையடுத்து, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு

இதன்போதே, கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அதிபருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொது நிதி குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினமே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...