23 6499a3d0c84b8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

Share

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் த்ரைய்ன் லோரன்தியு கிறிஸ்தா( Traian Laurentiu Hristea,) தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

வெளிவிவகார துணை அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் தியானா தாஸி (Diana Tase) மற்றும் ஆலோசகர் போக்தான் அல்தா ( Bogdan Aldea ) ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சிறிலங்கா தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்கு ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...

sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...