23 6499a3d0c84b8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

Share

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் த்ரைய்ன் லோரன்தியு கிறிஸ்தா( Traian Laurentiu Hristea,) தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

வெளிவிவகார துணை அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் தியானா தாஸி (Diana Tase) மற்றும் ஆலோசகர் போக்தான் அல்தா ( Bogdan Aldea ) ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சிறிலங்கா தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்கு ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...