220719221359 01 sri lanka president election parliament restricted scaled
இலங்கைசெய்திகள்

ரணிலின் கட்சிப் பக்கம் சாயும் எம்.பிக்கள்

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்களைத் தம்வசம் வைத்துக்கொள்வதற்கு மொட்டுக் கட்சி தயாராகி வருகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் என மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளர் என மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் அறிவித்து வருகின்றனர். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி 30 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாகச் செயற்படும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பக்கமும் குழுவொன்று சென்றுவிட்டால் அடுத்த தேர்தலில் அது தாக்கமாக அமையும் என்பதாலேயே கட்சியின் பலத்தைக் காக்க மொட்டுக் கட்சி தற்போது வியூகம் வகுத்து வருகின்றது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...