kkk
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

Share

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

பொது சுகாதார ஆய்வாளர்களால் (PHI) அணுக முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய கட்டிடங்களில் தேங்கி நிற்கும் நீரில் இரசாயனங்களும் தெளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேல்மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர,

நீரை அகற்ற முடியாத இடங்களில் இந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இரசாயனங்களைப் பயன்படுத்திய பிறகு, நுளம்பு குடம்பிகள் கூட அழிக்கப்படுவதோடு குறித்த இடங்களில், நுளம்புகள் திரும்பி வந்து முட்டையிடாது, எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக அபாய டெங்கு நிலைமை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சுகாதார அமைச்சின் அலுவலகங்களுக்கும் தினசரி அடிப்படையில் ட்ரோன் கமராக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...