காலாவதியான டின் மீன்களை விற்ற ஆறு பேர் கைது !
காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#srilankaNews
Leave a comment