30th anniversary of jaffna hospital massacre 2 21 1508551957
இலங்கைசெய்திகள்

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

Share

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தவறிக் கடலில் வீழ்ந்துள்ளார்.

அவரது வலது கை மற்றும் வலது கால் ஆகியவை வெளியிணைப்பு இயந்திரக் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்தன.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வைத்தியர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் அவரது கையை மீள இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் உட்பட வைத்திய நிபுணர்கள் இந்தச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...