30th anniversary of jaffna hospital massacre 2 21 1508551957
இலங்கைசெய்திகள்

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

Share

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தவறிக் கடலில் வீழ்ந்துள்ளார்.

அவரது வலது கை மற்றும் வலது கால் ஆகியவை வெளியிணைப்பு இயந்திரக் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்தன.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வைத்தியர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் அவரது கையை மீள இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் உட்பட வைத்திய நிபுணர்கள் இந்தச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...