z0LStDYfSn36zvuAVpgZ
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

Share

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவுப் பொருட்களையும் அபகரித்துள்ளது.

யானையின் தாக்குதலால் பேருந்தில் வந்த 30 பக்தர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்துல்பாவ காவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

கபில என்ற இந்த யானை கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை இவ்வாறு தாக்கி துன்புறுத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சித்துல் பவ்வ விகாரையின் தலைவர் நஹிமியோ தெரிவித்தார்.

இந்த யானையை இந்த பகுதியில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை அது பலனளிக்கவில்லை.

கதிர்காமத்தில் இருந்து யால காடுகளுக்கு நடுவில் உள்ள சிதுல்பாவ கோவிலுக்கு சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் கதிர்கமுவ கல் வாங்குவ பகுதியில் வைத்து கபில என்ற இந்த யானை யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் தாக்குதலால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி, இருபுறமும் உள்ள கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் உள்ளேயும், மேற்கூரையிலும் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், பைகள் அனைத்தும் கீழே சிதறி கிடக்க காணப்பட்டது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...