university student union jaffna university
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!!

Share

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடகிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய பிரச்சனையானது இலங்கையிலே வடகிழக்கு மக்களுடைய அடக்கு முறையாக இடம் பெறுகிறது.

அந்த வகையிலே பயங்கரவாத தடைச் சட்டம் என்ற வகையில் 44 வருடமாக எங்களுடைய மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாறாக இப்பொழுது ஒரு சட்டமூலம் வந்திருக்கின்றது .

அந்த சட்டம் மூலம் எங்களை அடக்குவதற்கான சட்டமூலமே அதாவது ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்ட சட்யமூலமாகவே இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.

மாணவர் சமூகத்தை பாரியளவில் இச் சட்டமூலம் பாதித்திருக்கிறது. எங்களுடைய மக்களின் குரல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் நசுக்கபடுகின்து.

மேலும் ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்து இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே இந்த புதிதாக உருமாறி வரவிருக்கின்ற இந்த சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

இலங்கை பாராளுமன்றத்திலே இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்ககூடாது.

ஆகவே இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்கின்றது. தொடர்சியாக இவ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீதான நகர்வுகள் அதனை நடைமுறைபடுத்த முன்னெடுக்கப்படுமானால் வடகிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...