boat
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

Share

சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய வலைகளும் மீட்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றிய நிலையில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் மடியுடன் கூடிய இழுவை வலையைப்பயன்படுத்தியமை, உள்நாட்டு நீர் நிலைகளில் 85Mm அளவை விட குறைந்த வலையைப்பயன்படுத்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர். க.மோகனகுமார் தெரிவித்தார்.

குறித்த ஆறு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் சுபராஜினி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது 02.05.2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: மீண்டும் பணிக்குத் திரும்பினர்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று (ஏப்ரல்...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை மெழுகுத் துணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

வத்தளை, மபோலா பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி (Wax cloth) உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் இன்று...

world 2
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் பயங்கரம்: குடியிருப்பு கட்டிடம் மீது வான் தாக்குதல், 13 பேர் பலி!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு தென்மேற்கே அமைந்துள்ள இஸ்லாம்ஷார் (Islamshahr) பகுதியில், திங்கள்கிழமை அதிகாலை ஒரு குடியிருப்பு...

world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரதானையில் 826 லீற்றர் டீசல் பறிமுதல்: இருவர் கைது!

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 826 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்ததற்காக, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள மரதானா...