boat
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

Share

சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய வலைகளும் மீட்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றிய நிலையில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் மடியுடன் கூடிய இழுவை வலையைப்பயன்படுத்தியமை, உள்நாட்டு நீர் நிலைகளில் 85Mm அளவை விட குறைந்த வலையைப்பயன்படுத்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர். க.மோகனகுமார் தெரிவித்தார்.

குறித்த ஆறு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் சுபராஜினி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது 02.05.2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...