weather
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வெப்பநிலை!! – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Share

அதிகரிக்கும் வெப்பநிலை!! – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகலை மாவட்ட மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், அதிக அளவில் இருப்பதைக் காட்டுகிறது.

இந்த நிலையில், பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது..

வீடுகளில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளவும் திணைக்களம் கூறுகிறது.

சிறிய குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பெரியவர்களை கேட்டுக் கொள்கிறது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...