mahinda 1
இலங்கைசெய்திகள்

மஹிந்த இத்தாலி பயணம் – பாப்பரசரை சந்திக்கமாட்டார்!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்,

இத்தாலியிலுள்ள போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அடுத்த வார இறுதியில் இத்தாலி செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், பிரதமர் புனித வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் உட்பட்ட பல விடயங்கள் பற்றிய விசாரணையின் முன்னேற்றம் பற்றி விளக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திக்கவுள்ளார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...