sri lanka
இலங்கைசெய்திகள்

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

Share

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பரிஸூக்கு வாரத்தில் 3 தினங்கள் விமான சேவையை நடத்தவுள்ளது.

அதன்படி வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் முற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மறுநாள் காலை 7.40 மணிக்கு பரிஸை சென்றடையும்.

மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...