கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
30 வயதுக்கு கீழ் 7 பேரும், 30–60 வயதுக்கு உட்பட்டோர் 40 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட்டோர் 133 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தோரில் 97 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 173 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 65 ஆயிரத்து 940 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment