WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷமிகளால் படகுகளுக்கு தீ வைப்பு

Share

நாகர்கோயில் பகுதியில் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் படகுகள் ஆரம்பத்தில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குறித்த படகுகள் தொழிலில் ஈடுபடாத காரணத்தினால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்ரணி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான பத்து படகுகளே இவ்வாறு விஷமிகளால் தீமூட்டி சொத்து அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM 2 WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...