Flag of the Peoples Republic of China.svg 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு – சீனா ஆர்வம்

Share

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் இலங்கை மின்சார சபை (இ.மி.ச) ஆகியவற்றின் மறுசீரமைப்பு செயல்முறையை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், சீனாவின் சினோபெக் மற்றும் சைனா மெர்ச்சன்ட்ஸ் குழுமம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்ய கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.

பெற்றோலியம், இரசாயனங்கள், வர்த்தகம், துறைமுகம் மற்றும் தொழில்துறை பூங்கா செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பல பகுதிகளாகப் பிரித்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்ட தேவையான பணிகளை முடித்துள்ளதால், உத்தேச மறுசீரமைப்பு செயல்முறையை தொடருமாறு கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் சினோபெக் குழுமத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் வருகை இத்தருணத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்யும் நோக்கத்துக்காக சினோபெக் இலங்கை சந்தையில் இணைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...