image b326d26cd1
இலங்கைசெய்திகள்

கறுப்புச் சந்தையில் காப்புறுதி நிறுவனங்கள்

Share

நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான வினா நேரத்தில்  காமினி வலேபொட எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு  நிதி இராஜாங்க அமைச்சர்   தெரிவித்தார்.

காமினி வலேபொட எம்பி தமது கேள்வியின் போது, நாட்டில் பல தனியார் காப்புறுதி நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனங்கள் கறுப்புச் சந்தை வர்த்தகத்தில்  ஈடுபட்டு பாரிய வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதற்கான வருமான வரி முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், சேவையில் ஈடுபடுத்தாமல் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கும் கூட எந்த சலுகையுமின்றி ஈவிரக்கமற்ற விதத்தில் முழுமையான  தவணைக் கொடுப்பனவுகளை அறவிட்டு வந்துள்ளன.

இதனால் வாகன உரிமையாளர்கள் விவசாயிகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.அத்துடன் அத்தகைய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு முறையாக வருமான வரியை செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளித்த போதே, நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும்.

அத்தகைய தனியார் காப்புறுதி நிறுவனங்கள் உரிய முறையில் வருமான வரியை செலுத்துகின்றனவா என்பது தொடர்பில் ஆராய விசேட கவனம் செலுத்தப்படுவதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படும்  என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...