அரசியல்
தபால் மூல வாக்களிப்பு – இன்று விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (14) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இன்று (14) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login