இலங்கை
காற்றழுத்த தாழ்வு நிலை – நாட்டில் இடியுடன் கூடிய மழை
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து ஜனவரி 31 மாலை வரை வடமேற்காக பலமாக நகர்ந்து பின்னர் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் திரும்பி 2023 பெப்ரவரி 01 ஆம் திகதி காலை இலங்கையின் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login