Power cut
இலங்கைசெய்திகள்

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!!

Share

அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நீரைத் திறந்துவிட தீர்மானித்துள்ளமையால் இன்று (30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொத்மலை மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து  நீர்த்தேக்கங்களில் இருந்து போதியளவு நீரை திறந்து விடுவதற்கு மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழமுக்கமாக வலுப்பெறுகின்றமை காரணமாக மழை பெய்யும் சாத்தியம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...