30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம்

Share

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன், இலங்கையிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை அமைச்சின் ஊடாக விவசாய அமைச்சு விநியோகிக்கவுள்ளது.

2022/2023 பெரும் போகத்தில் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் TSPயின் அளவு அவர்கள் சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஒரு விவசாயிக்கு ஒதுக்கப்படும் TSP உரத்தின் அளவை நிர்ணயம் செய்வதற்காக இந்த பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்புடன் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து நெல் விவசாயிகளையும் அந்தந்த விவசாய சேவை மையத்திற்குச் சென்று அவர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமாறு FAO அழைப்பு விடுத்துள்ளது.

விநியோகப் பட்டியல்கள் 2023 ஜனவரி 5 வரை காட்சிப்படுத்தப்படும், மேலும் உர விநியோக திகதி கமநல சேவை மையங்கள் மூலம் பகிரப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...