ezgif 5 706d4cd3ae
இந்தியாஇலங்கைசெய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பீடி இலைகள் மீட்பு!!

Share

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, அபின், செம்மரக்கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க கடலோர பொலிஸாரும், உள்ளூர் பொலிஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ரோந்து நடவடிக்கையின்போது, அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் 1 ½ டன் பீடி இலைகள் இருப்பதும், அது இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், குறித்த கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கிலோ பீடி இலையின் இந்திய மதிப்பு ரூ. 500 ஆகும். இலங்கையில் ஒரு கிலோ ரூ. 3 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#India

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...