corona virus
செய்திகள்இலங்கை

யாழில் மேலும் ஐவர் தொற்றால் பலி!

Share

யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (99 வயது) பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வேளை உயிரிழந்த நிலையில் அவரது சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில், கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...