download 4
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Share

தமது கற்றல் கால எல்லையை கடந்த 05 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இது சட்டவிரோத செயல் என்று தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மேற்குறிப்பிட்ட பணிப்புரையை விடுத்துள்ளார்.

தமது கற்றல் கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டப்படிப்பை முடிப்பதற்கு 3 வருடங்கள் அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும் அவ்வாறான மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பதால் செலவீனங்கள் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் காலப்பகுதியில் கற்பித்தல், விடுதிகள், நீர், மின்சாரம், கற்பித்தல் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, தமது கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாவிடின், அவற்றுக்கான செலவீனங்களை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...