இலங்கைசெய்திகள்

சாதாரண தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

Share

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இன்று (27) தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சாதாரண பரீட்சையை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அதற்கும் தயாராக வேண்டும் என்று தெரிவித்த அவர், பரீட்சைகள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், சீருடைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், டிசெம்பர் 3ஆம் வாரத்தில் முதல் தொகுதி சீருடைகள் கிடைக்கப்பெறும் என்றும் 70%மான சீருடைகள் சீனாவில் இருந்து பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களில் விலையைக் குறைக்கும் நோக்கில் அவை குறித்த செஸ் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...