c93c5192 8082ab17 ministry of health
செய்திகள்இலங்கை

அனுமதி இன்றி பரிசோதனை – ஆராய பணிப்பு !

Share

சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தங்கள் மருத்துவமணைகளில் பரிசோதனைகளின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தொடர்பான தகவல்களை குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய விசேட தொற்றுநோய் நிபுணர் ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்,

தனியார் மருத்துவமனைகளில் கொவிட் பரிசோதனை மேற்கொள்பவர்கள், தொற்று உறுதியான பின்பு மருத்துவ ஆலோசனையின்றி செயற்படுவதால் மரணத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

இதனாலேயே வீடுகளில் நிகழ்கின்ற கொரோனாத் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .

இதேவேளை, பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...