LITRO
இலங்கைசெய்திகள்

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு??

Share

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் சிலிண்டர்களை தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்கள், இன்று (08) அறிவித்தன.

எனினும், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர், தட்டுப்பாடு இன்றி எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்து வருவதாக அறிவித்தனர்.

மேலும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டியவும் தமது நிறுவனம், எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி விநியோகித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...