Eran Wickramaratne
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த வருடமும் பணம் அச்சிடும் நிலை!

Share

அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நூற்றுக்கு 200 – 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வரிகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 11 சதவீதமாக அதிகரிக்கும் என அரசாங்கம் கூறுகிறது. இது பகல் கனவாகும். இதனை செய்யவே முடியாது எனவும் தெரிவித்தார்.

செலவுகளைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவைகளை மக்கள் நிறுத்துவார்களாக இருந்தால், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் செலவுகளையும் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...