image 67ea49659b
அரசியல்இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு! – ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா உறுதி

Share

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த உதவி இராஜாங்கச் செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 1 8
செய்திகள்இலங்கை

வவுனியாவில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்: வட்டி, போதைப்பொருள் விற்பனை மூலம் அபகரித்த சொத்துக்கள் இலக்கு!

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த நபர்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள்...

image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27)...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...