கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 7 லட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டில் 409,919 ஆண்களும் 290,814 பெண்களும் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளனர்.
அத்துடன், ஓகஸ்ட் மாதமே அதிகளவான (115,286) கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 392,032 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment