நகை
இலங்கைசெய்திகள்

நகைகள் கொள்ளை! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

Share

பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கி, தங்கை நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பேராதனை, பிலிமத்தலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவரில் இருவர் பெண்களாவர்.

தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு வாங்கும் போர்வையில் வீடொன்றிற்குள் நுழைந்த சந்தேகநபர்கள், அங்கிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தி, தூக்க மாத்திரைகளை விழுங்கச் செய்து, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களால் களவாடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மருதானையிலும் மற்றுமொரு பகுதி பேராதனையிலும் அடகு வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...