thumbnail 2 1
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்களால் உண்ணாவிரதம் முடித்துவைப்பு

Share

தியாக தீபம் திலீபனை அஞ்சலி செய்யும் வகையில் நல்லூரில் உள்ள அவருடைய நினைவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதம் பல்கலைக்கழக மாணவர்களால் நீராகாரம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் முன்னெடுப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனியொன்று இடம்பெற்று நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை வந்தடைந்தது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமர்ந்திருந்ததுடன் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...